Breaking News

ஆக்லாந்து பள்ளிகள் நாளை திறக்கப்படும்...!!

ஆக்லாந்து பள்ளிகள் நாளை திறக்கப்படும்...!!

ஆக்லாந்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்பட உள்ளன.

ஆக்லாந்தின் அனைத்து பள்ளிகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என்ற உத்தரவை கல்வி அமைச்சகம் நீக்கியதை அடுத்து, ஆக்லாந்தில் உள்ள பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்ததை விட விரைவாக நீர் வடிந்து வருவதாகவும், இந்நிலையில் தங்களின் உத்தரவை நீக்குவதாகவும் கல்வி அமைச்சகம் இன்று பிற்பகல் அறிவித்தது.

இதனிடையே Orewa கல்லூரி, வெள்ள சேதத்தை சரி செய்யும் வரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.