Breaking News

சுதந்திர தின விழா ஒத்திகை நாளை முதல்: 20 வீதிகள் மூடப்படும்

சுதந்திர தின விழா ஒத்திகை நாளை முதல்: 20 வீதிகள் மூடப்படும்

75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை  முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை கொழும்பு காலிமுகத்திடலை மையமாக கொண்டு 20 வீதிகள் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும்.

இது தவிர, பல வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படும்.