Breaking News

"டேய் எப்புட்றா?" - பங்களாதேஷில் ஒளிந்து விளையாடிய சிறுவன் மலேசியாவில் கண்டுபிடிப்பு...!!

"டேய் எப்புட்றா?" - பங்களாதேஷில் ஒளிந்து விளையாடிய சிறுவன் மலேசியாவில் கண்டுபிடிப்பு...!!

ஓளிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர், ஆறு நாட்களுக்குப் பிறகு வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக பங்களாதேஷில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

15 வயது சிறுவன் ஒருவன் பங்களாதேஷ் நகர் ஒன்றில் ஜனவரி 11 ஆம் திகதியன்று ஒளிந்து விளையாடிக்‌ கொண்டிருந்தபோது‌ கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் தன்னையறியாது நித்திரையில் ஆழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் இருப்பதை அறியாத பணியாளார்கள், குறித்த கொள்கலனை பூட்டி மலேசியாவிற்கு கப்பலில் அனுப்பியுள்ளனர்.

இந்தநிலையில் அந்த சிறுவன் ஆறு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 17 ஆம் திகதியன்று அன்று மலேசிய அதிகாரிகளால் மலேசியாவின் மேற்கு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.