Breaking News

பெப்ரவரி 20 முதல் 30 வரை தபால் வாக்களிப்பு

பெப்ரவரி 20 முதல் 30 வரை தபால் வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி கடந்த 23ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.

தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது