Breaking News

ஆக்லாந்தின் Papakura வில் இடம்பெற்ற கோர விபத்தில் பச்சிளம் குழந்தை பலி...!!

ஆக்லாந்தின் Papakura வில் இடம்பெற்ற கோர விபத்தில் பச்சிளம் குழந்தை பலி...!!

கடந்த வாரம் ஆக்லாந்தின் Papakura என்ற இடத்தில் நடந்த விபத்து குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் இந்த விபத்தில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் இன்று உறுதிப்படுத்தி.

கடந்த புதன்கிழமை (18) இரவு 10.42 மணியளவில் Porchester சாலையில் வாகனம் மற்றும் இலகுரக டிரக் இடையே இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அந்த குழந்தையின் குடும்பத்தினருடன் உள்ளன என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் இன்று காலை தெரிவித்தார்.

இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர், அவர்கள் தொடர்ந்து குணமடைந்து வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.