Breaking News

இது தமிழ்நாடு இல்லங்க...ஸ்டாலின் தலைமையிலான போதை நாடு - சிவி சண்முகம் ஆவேசம்...!

இது தமிழ்நாடு இல்லங்க...ஸ்டாலின் தலைமையிலான போதை நாடு - சிவி சண்முகம் ஆவேசம்...!

எம்.ஜி.ஆர் 106 -வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றபோது விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான சிவி சண்முகம் இதில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சி வி சண்முகம் கூறியதாவது...

தமிழக அரசு முழுக்க முழுக்க முடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தினம் தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சிறுவர், சிறுமியருக்கு பாதுகாப்பில்லை. இதற்கெல்லாம் காரணம் இன்றைக்கு தமிழ்நாடு என பெருமையாக பேசும் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு என்ற பெயர் மாறி போதை நாடாக பெயர் மாறியிருக்கிறது.

இது தமிழ்நாடு இல்லை ஸ்டாலின் தலைமையிலான போதை நாடு.

எங்கே பார்த்தாலும் கஞ்சா, அபின், ஊசி, போதை மாத்திரை, போதை சாக்லேட் தங்கு தடையின்றி கிடைக்கிறது.

பள்ளி அருகிலும் கல்லூரி அருகிலும் மருத்துவமனை அருகிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் போதை பொருட்கள் தாரளமாக கிடைக்கிறது.

இன்று மாணவர் சமுதாயம் திமுக ஆட்சியால் சீரழிந்து கொண்டு இருக்கிறது.

அதனால்தான் ஆளுநர் அவர்கள் சட்டசபையில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை படிக்கவில்லை. தொழில் துறையில் முதன்மையான மாநிலம் என்று சொன்னார்கள். முதலிடத்தில் எங்கே இருக்கிறது? 7-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

உண்மையை போடுங்கள். 7-வது இடத்தில் இருக்கிறது என மாற்றிக்கொடுங்கள் நான் படிக்கிறேன் என்று சொன்னார்.

நீங்கள் பொய் சொன்னால் அவர் படிக்க வேண்டுமா? இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.

விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை. எங்கு பார்த்தலும் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. தமிழ்நாட்டில் பசி, பட்டினி, வேலையின்மை அதிகரித்துள்ளது இதனை திசை திருப்பவே மக்கள் உணர்ச்சிகளை தூண்டும் விதத்திலும், சட்டமன்றத்தில் கலவரம் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின்.

இன்றைக்கு தமிழக ஆளுநரையே மிரட்டி ஒருமையில் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின் என்று கடுமையாக விமர்சித்தார்.