Breaking News

பதவி விலகுகிறார் பிரதமர் ஆடர்ன்...!!

பதவி விலகுகிறார் பிரதமர் ஆடர்ன்...!!

பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்றும் நாட்டின் பிரதமராக தனது கடைசி நாள் பெப்ரவரி 7 ஆம் திகதி என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் அவர் ஊடகங்களிடம் பேசுகையில்..

"ஆறு வருடங்கள் சில பெரிய சவால்களுக்குப் பிறகு எனது பதவியை இராஜினாமா செய்கிறேன். ‌நானும் ஒரு மனிதை மற்றும் அரசியல்வாதிகளும் மனிதர்கள்"

“எனவே இன்று நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் எனது பிரதமர் பதவிக்காலம் பெப்ரவரி 7 ஆம் திகதி முடிவடையும் என்றும் அறிவிக்கிறேன்"

"ஒரு நாட்டை வழிநடத்துவது என்பது எவருக்கும் கிடைக்கக்கூடிய மிகவும் சிறப்பு வாய்ந்த வேலை என்று நான் நம்புகிறேன், ஆனால் அது மிகவும் சவாலான ஒன்றாகும்" என அவர் தெரிவித்தார்.

பிரதமர் ஆர்டெர்ன் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது அவரிடம் வருத்தத்தையும் கண்ணீரையும் காணக்கூடியதாக இருந்தது.

2023ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் அக்டோபர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.