Breaking News

ஆக்லாந்து பூங்காவில் பெண் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை - கத்தியால் தாக்கியதால் காயம்...!!

ஆக்லாந்து பூங்காவில் பெண் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை - கத்தியால் தாக்கியதால் காயம்...!!

ஆக்லாந்தின் Tōtara பூங்காவில் உள்ள Puhinui வனப் பாதையில் நேற்று காலை 10.25 மணியளவில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த பெண் கத்தியால் தாக்கப்பட்டதன் விளைவாக அவர் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

குற்றவாளி கால் நடையாகத் தப்பிச் சென்றதாகவும், அந்த நபரை பொலிஸார் தேடிய போதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றவாளி நீல நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு ஷார்ட்ஸ் அணிந்து, முகத்தில் பச்சை குத்திக்கொண்டு, 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட, குண்டாகத் தோற்றமுடையவர் என விவரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணி முதல் 11.30 மணி வரை அந்தப் பகுதியில் இருந்தவர்களிடமும், அந்த பகுதியில் புகைப்படம் எடுத்துக்க 

கொண்டிருந்தவர்களிடம் இருந்தும் மற்றும் தாவரவியல் பூங்கா அல்லது டோட்டாரா பூங்காவிற்கு இடையில் உள்ள வீடியோ காட்சிகளை வைத்திருப்பவர்களிடமிருந்தும் பொலிஸார் தகவல்களை முறையிடுகின்றனர்.

இது தொடர்பில் துப்பறியும் இன்ஸ்பெக்டர் கரேன் பிரைட் கூறுகையில்....

இச் சம்பவம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நம்பமுடியாத துயரமான சோதனையாக இருந்தது, மேலும் அவளுக்கு எங்களுடைய ஆதரவு இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம் என்றார்.

இந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்றும் எங்கள் விசாரணைக் குழு குற்றவாளியைப் பிடிக்க கடுமையாக உழைத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

சமூகம் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்களை கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.