Breaking News

Coromandel Peninsula கடற்கரையில் நீரில் மூழ்கிய ஏழு பேர் - ஒருவர் பலி; ஒருவர் மாயம்....!!

Coromandel Peninsula கடற்கரையில் நீரில் மூழ்கிய ஏழு பேர் - ஒருவர் பலி; ஒருவர் மாயம்....!!

Coromandel Peninsula வில் உள்ள Whangamatā என்ற இடத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்‌ ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காலை 11.30 மணியளவில் Opoutere கடற்கரையில் இடம்பெற்ற குறித்த சம்பவத்திற்கு பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் விரைந்தன.

ஏழு பேர் கொண்ட குழுவினர் நீரில் இருந்து உதவிக்காக சிக்னல் செய்ததைக் கண்ட நபர்களால் அவசர சேவைகளு தகவல் வழங்கப்பட்டதாக பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிற்பகல் 3.30 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளதையும், ஒருவர் காணாமல் போனதையும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

காணாமல் போன நபரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தேடுதல் பணியில் ஹெலிகாப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் ஐந்து பேருக்கு சிகிச்சை அளித்ததை செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அருகிலுள்ள Pauanui கடற்கரையும் மூடப்பட்டுள்ளது.