Breaking News

ஆக்லாந்து - திருடப்பட்ட கார் North Shore பூங்காவில் தீ வைத்து எரிப்பு...!!

ஆக்லாந்து - திருடப்பட்ட கார் North Shore பூங்காவில் தீ வைத்து எரிப்பு...!!

திருடப்பட்ட கார் ஒன்று ஆக்லாந்தின் North Shore இல் உள்ள பூங்காவில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் ஆண்டி ஜாக்வெட் என்ற ஒருவர் தனது நாய் குரைத்ததால் தான் விழித்ததாகவும், பின்னர் கார் அருகில் உள்ள Tui பூங்காவில் இருந்து ஒரு வெளிச்சம் வருவதைக் கண்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர் ஒரு கார் தீப்பிடித்து எரிவதை ஜாக்வெட் பார்த்தார். அவரது மனைவி தீயணைப்புத் துறையை அழைத்தார்.

பேஸ்புக் பக்கத்தில் இந்த கார் தீ  பற்றிய வீடியோவை இடுகையிட்ட பிறகு, வாகனத்தின் உரிமையாளர் ஜாக்வெட்டைத் தொடர்பு கொண்டு குறித்த கார் கடந்த வருடம் தன்னிடம் இருந்து திருடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது நாயால் எச்சரிக்கப்படாவிட்டால் தீ மிகவும் மோசமாகி பூங்கா முழுவதும் பரவியிருக்கும் என்று ஜாக்வெட் கூறினார்.