இன்று பிற்பகல் ஆக்லாந்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Greenlane அருகே உள்ள தெற்கு நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்தனர்.
இந்நிலையில் குறித்த வாகனங்களின் ஓட்டுநர்களில் இருவர் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மற்ற ஓட்டுநர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.