Breaking News

அதிகாலையில் அதிர்ந்தது இந்தோனேசியா - நடுங்கிய மக்கள்...!!

அதிகாலையில் அதிர்ந்தது இந்தோனேசியா - நடுங்கிய மக்கள்...!!

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.0 ரிச்டர் அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கம் 48 கிலோமீற்றர் ஆழத்தில் ஆச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீற்றர் மையமாக இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் மையத்தால் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை.

பொருட்சேதம், உயிரிழப்பு குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த நவம்பர் 21 அன்று 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர்.