Breaking News

ஹமில்டனில் வாகனத் திருட்டு சம்பவம் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது...!!

ஹமில்டனில் வாகனத் திருட்டு சம்பவம் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது...!!

வாகனத் திருட்டு தொடர்பாக இன்று ஐந்து இளைஞர்கள் ஹமில்டனில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Ōhaupō க்கு அருகில் உள்ள Ōhaupō சாலையில் இரண்டு வாகனங்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் செயல்படுவதாக நபர் ஒருவர் காவல்துறைக்கு புகார் அளித்தார்.

இதனையடுத்து குறித்த வாகனங்களை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.

அந்த வாகனங்களில் ஒன்று திருடப்பட்ட வாகனம் என பொலிஸார் உறுதிசெய்துள்ளனர்.

மற்ற வாகனம் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

வாகனங்களுக்குள் சுத்தியல், கத்தி மற்றும் நாணயப் பை ஒன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றார், ஆனால் விரைவில் கைது செய்யப்பட்டார் என 
துப்பறியும் மூத்த சார்ஜென்ட் டெர்ரி வில்சன் தெரிவித்தார்.

ஐவரும் இன்று ஹமில்டன் இளைஞர் நீதிமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.