Breaking News

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்...!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்...!!

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் நேற்று காலை டெல்லியில் இருந்து தனது சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு பயணித்த போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது.

இதில் அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.

சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்தார். கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது.

காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார்.

ரிஷப் பண்ட் பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக பண்ட் டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பப்படலாம் என் கூறப்படுகிறது.

மருத்துவக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறும் போது அவரது உடல்நிலை எலும்பியல் துறையின் டாக்டர் கௌரவ் குப்தாவால் கண்காணிக்கப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படாமல் பண்ட் நன்றாக இருக்கிறார். அவருடன் அவரது தாயார் மருத்துவமனையில் இருக்கிறார்.

எய்ம்ஸ்-ரிஷிகேஷில் விளையாட்டு காயங்கள் பிரிவை கவனித்து வரும் டாக்டர் கமர் ஆசம் கூறும் போது பண்ட் தசைநார் காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும்.

அது கடுமையானதாக இருந்தால், இன்னும் அதிக காலம் எடுக்கலாம் என தெரிவித்தார்.