Breaking News

சமந்தாவின் யசோதா திரைப்படத்திற்கு வந்த சோதனை...!!

சமந்தாவின் யசோதா திரைப்படத்திற்கு வந்த சோதனை...!!

சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'யசோதா' படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.28 கோடி வசூலித்துள்ளது.

வாடகைத்தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளையும்‌ அதை சமந்தா எப்படி கண்டுபிடித்து வெளி உலகுக்கு அம்பலப்படுத்துகிறார் என்பதும் தான் இந்த கதை.

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

இப்படி வாடகைத்தாய் மோசடி செய்யும் மருத்துவமனைக்கு படத்தில் ஒரு பெயர் வைத்துள்ளனர்.

இங்குதான் பிரச்சினை ஆரம்பம் ஆகியுள்ளது.

நிஜமாகவே ஐதராபாத்தில் படத்தில் குறிப்பிட்டுள்ள பெயரில் ஒரு மருத்துவமனை இயங்குகிறது.

இந்நிலையில் குறித்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் யசோதா படத்துக்கு எதிராக ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

எங்கள் மருத்துவமனை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யசோதா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.டி.டி.யில் யசோதா படத்தை டிசம்பர் 19 ஆம் திகதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.