Breaking News

கிறிஸ்ட்சர்ச் பூங்காவில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான நபர் மரணம்..!!

கிறிஸ்ட்சர்ச் பூங்காவில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான நபர் மரணம்..!!

கடந்த 14 ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச் பூங்காவில் நடந்து சென்ற போது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் Bexley பூங்காவின் Pages சாலை அருகில் குறித்த நபர் தனது நாயுடன் நடந்து சென்ற போது கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டார்.

அவர் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என துப்பறியும் ஆய்வாளர் நிக்கோலா ரீவ்ஸ்‌ தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காவல்துறை தங்கள் இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறது; இது ஒரு அதிர்ச்சிகரமான நேரம் மற்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும்" என ரீவ்ஸ் கூறினார்.

இச் சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை 18 வயது ஆணும் 23 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது பாதிக்கப்பட்ட நபரின் மரணத்தை தொடர்ந்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.