Breaking News

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம். - 20 பேர் பலி..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம். - 20 பேர் பலி..!!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவில் 5.6 க பதிவாகி உள்ளது. 

நிலநடுக்கம் உணரப்பட்டவுடன் பீதியடைந்த மக்கள் அனைவரும் தங்களது குடியிருப்புகளை விட்டு உடனடியாக வெளியேறி சாலைகளிலும், தெருக்களிலும் தஞ்சமடைந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்  ஓடியுள்ளனர்.

 இந்த நிலநடுக்கத்தினால் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.மேலும்  நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும், 300 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் ஏராளமான வீடுகள் இருளில் மக்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகியுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.