Breaking News

களுத்துறையில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளுடன் ஆசிரியர் ஒருவர் கைது!

களுத்துறையில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளுடன் ஆசிரியர் ஒருவர் கைது!

களுத்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட பிரேகாபலின் 150 மில்லிக்கிராம் மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1299 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட நபர் 4,5,6,7, மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை உள்ளிட்ட களுத்துறையை அண்மித்த பாடசாலை மாணவர்களுக்கு குறித்த ஆசிரியர் மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இதேவேளை பிரதான போதை பொருள் வர்த்தகரான படோவிட்ட நளின் என்பவரின் உதவியாளர் ஒருவர் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலையில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 41 கிராம் போதை பொருளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.