Breaking News

ஆக்லாந்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் - பொலிஸார் விசாரணை...!!

ஆக்லாந்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் - பொலிஸார் விசாரணை...!!

ஆக்லாந்தின் North Shore பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு Beach Haven என்ற இடத்தில் உள்ள Lancaster சாலை 10க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களால் தடுக்கப்பட்டுள்ளது மற்றும் குறித்த பகுதியில் ஒரு வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியை காலி செய்யுமாறு பொலிசார் மெகாஃபோன் மூலம் கேட்டுக் கொண்டதை அடுத்து தாங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக இன்று காலை மேற்கு ஆக்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து இரண்டு மழலையர் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக Beach Haven இல் தற்போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற முகவரியில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதமேந்திய பொலிஸார், நாய்கள் மற்றும் ஈகிள் ஹெலிகாப்டர் சம்பவ இடத்தில் காணப்படுகின்றன.

Beach Haven Primary, Birkdale Intermediate, Verran Primary,  Birkdale North மற்றும் Chelsea Primary உள்ளிட்ட பல பள்ளிகள் இன்று காலை துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகளைத் தொடர்ந்து பூட்டப்பட்டன.

பொலிஸாரின் விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த பூட்டுதல்கள் இப்போது நீக்கப்பட்டுள்ளதாக Waitematā‌‌ North ஏரியா கமாண்டர் இன்ஸ்பெக்டர் மேட் லாரன்சன் கூறினார்.