Breaking News

சானியா மிர்சா,சோயப் மாலிக் விவாகரத்து உறுதி...!!

சானியா மிர்சா,சோயப் மாலிக் விவாகரத்து உறுதி...!!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் ஆகியோர் விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.தனது எல்லை கடந்த காதலனாகிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை  கடந்த 2010 ம் ஆண்டு  காதலித்து  திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி தற்போது முறைப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. சானியா மிர்சா கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் வசித்து வருகிறார்.இத் தம்பதிகளுக்கு இஷான் என்ற மகன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,மாலிக்கின் பாகிஸ்தானில் உள்ள நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் "ஆம், அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்" என்று   கூறியுள்ளார்.

சோயப் தனக்கு துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர் எனவும் இருப்பினும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.