Breaking News

புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்...

புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்...

தற்போதைய கொரோனா பரவல் நிலையையடுத்து, திருமண நிகழ்வுகள், மரண நிகழ்வுகள், இரவு நேர களியாட்டங்கள் என்பவற்றை நடத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானித்துள்ளதாக,கொரோனா கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதன்படி ,சுகாதார அதிகாரிகளுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலையடுத்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, திருமண நிகழ்வொன்றில் பங்கேற்க 150 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறைந்தப்பட்சம் 50 பேர் மாத்திரமே பங்கேற்க அனுமதிப்படுவர் எனவும் மரண நிகழ்வை 24 மணிநேரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.