Breaking News

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும்

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும்

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,சிறைச்சாலைகள் பயிற்சி பாடசாலையில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம் சிறைச்சாலை அதிகாரிகள் 5,100 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

அதனிடையே ,அஸ்ட்ரா செனக்கா கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் ஜனாதிபதியின் ஆலோசணையின் பிரகாரம் நேற்று (15) ஆரம்பிக்கப்பட்டது.

மேல் மாகாணத்தில் அபாயம் வலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.