Breaking News

முடிவுகள் எட்டப்படும் வரை ஜனாஸா எரிப்பு தொடரும்

முடிவுகள் எட்டப்படும் வரை ஜனாஸா எரிப்பு தொடரும்

கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை எவ்விதமான முடிவுகளையும் தாம் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் ,ஜனாஸா அடக்கம் தொடர்பான முடிவுகள் எட்டப்படும் வரை முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தலைமையில் வெளியிடப்பட்ட ஜனாஸாக்கள் எரிக்க வேண்டும் என்ற வர்த்தமானி அறிவிப்பே நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.