Breaking News

பிறந்து 18 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை ஆற்றில் தூக்கி எறிந்த கொடூர தாய் - அமெரிக்காவில் சம்பவம்...!!

பிறந்து 18 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை ஆற்றில் தூக்கி எறிந்த கொடூர தாய் - அமெரிக்காவில் சம்பவம்...!!

அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தில் 'பேயோ டெர்ரெபோன்' ஆற்றின் மேலே உள்ள பாலத்தில் இருந்து ஒரு பெண் தன் கைக்குழந்தையை ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை அன்று மாலை சுமார் 4.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து லூசியானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் ஆஷா ராண்டால்ப் என்ற அந்த பெண்ணை கைது செய்து கொலை குற்ற வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆஷா ராண்டால்ப்(30) என்ற பெண்மணி தன்னுடைய குழந்தையை எவ்வித காரணமுமின்றி வேண்டுமென்றே ஆற்றில் தூக்கி எறிந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளார்.

அதன்பின் அந்த குழந்தையை அவர் ஆற்றிலிருந்து மீட்டுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த அந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற போது ஆஷா தனது 8 வயது மற்றும் 6 வயது குழந்தைகள் இருவரையும் தனது வாகனத்தில் விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இந்த கொலை முயற்சியுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவும் தகவல்களை காவல்துறைக்கு அளிப்பவர்களுக்கு 1,000 டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.