Breaking News

கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு வணிக நிலையங்களில் கொள்ளை...!!

கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு வணிக நிலையங்களில் கொள்ளை...!!

இன்று காலை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு வணிக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதன்படி இன்று அதிகாலை 1 மணிக்கு முன்னதாக Yaldhurst இல் உள்ள Pound என்ற இடத்தில் ஒரு கடை கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாரிகள் வருவதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என்றும் அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சம்பவ இடத்தில் கண்காணிப்புப் படை அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரண்டாவது கொள்ளை சம்பவம், Papanui வீதி, Merivale என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் அதிகாலை 5.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளையில் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 33 வயதான குறித்த நபர் திருட்டு மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அக்டோபர் 6 ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.