Breaking News

பலத்த காயங்களுடன் ஆக்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம் - பொலிஸார் கொலை விசாரணை....!!!

பலத்த காயங்களுடன் ஆக்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம் - பொலிஸார் கொலை விசாரணை....!!!

ஆக்லாந்தில் உள்ள ஸ்டார்ஷிப் மருத்துவமனையில் குழந்தை ஒன்று உயிரிழந்ததை தொடர்ந்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மூன்று மாத குழந்தை பலத்த காயங்களுடன் செப்டம்பர் 18 ஆம் திகதி அன்று மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குழந்தை பின்னர் ஸ்டார்ஷிப் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் 31 வயதுடைய நபர் ஒருவர் குழந்தையை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

தற்போது குழந்தை உயிரிழந்ததை அடுத்து குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.