Breaking News

கிஸ்போர்ன் துப்பாக்கிச் சூடு சம்பவம்; கைது செய்யப்பட்ட நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை - காவல்துறை...!!!

கிஸ்போர்ன் துப்பாக்கிச் சூடு சம்பவம்; கைது செய்யப்பட்ட நபர்  துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை - காவல்துறை...!!!

கிஸ்போர்னில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞர்  துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை மாலை Totara தெருவில் ஏராளமான கும்பல் உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்த இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர், 12 வயது சிறுமி மற்றும் ஒரு இளம் பெண் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதேவேளை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் 18 வயது இளைஞனை கைது செய்தனர்.

தாக்குதல் ஆயுதம் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் அவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை அடையாளம் காண உதவக்கூடிய தகவல் உள்ளவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.