Breaking News

பச்சிளம் குழந்தையை கொலை செய்த வழக்கு - கைது செய்யப்பட்ட Northland இளைஞர் தான் குற்றமற்றவர் என மனு தாக்கல்..!!!

பச்சிளம் குழந்தையை கொலை செய்த வழக்கு - கைது செய்யப்பட்ட Northland இளைஞர் தான் குற்றமற்றவர் என மனு தாக்கல்..!!!

பச்சிளம் குழந்தையை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட Northland இளைஞர் இன்று காலை Whangārei இல் உள்ள உயர் நீதிமன்றத்தில், தான் குற்றமற்றவர் என மனு தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Ruakākā வில் பிறந்து ஐந்து வாரங்களேயான ஆண் குழந்தையை கொலை செய்ததாக 19 வயது இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார்.

அவருடைய பெயரை வெளியிடாமல் இருப்பதற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவர் குற்றமற்றவர் என்ற மனுவை குறித்த இளைஞன் சார்பாக இன்று பாதுகாப்பு ஆலோசகர் ஆர்தர் ஃபேர்லி தாக்கல் செய்தார்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.