Breaking News

"பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்" - ஐஸ்வர்யா ராயை கவிதையால் பாராட்டிய பார்த்திபன்...!!

"பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்" - ஐஸ்வர்யா ராயை கவிதையால் பாராட்டிய பார்த்திபன்...!!

நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யாராயுடன் எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஐஸ்வர்யாராயை கவிதை வடிவில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை நடிகர்-நடிகைகள் தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் கண்ணாடி அணிந்து ஐஸ்வர்யாராயுடன் எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஐஸ்வர்யாராயை கவிதை வடிவில் பாராட்டி பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில்..

''ஐஸ் வாரியம்..கற்றுக்கொள்ள…காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை, அழகை காத்திட கடும் முயற்சியும், விடா பயிற்சியும் செய்கிறார். அழகென நான் காண்பது…பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை (இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து ஒன்மோர் கேட்கா ஈகோவுடன் தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும் செல்பி எடுத்து அன்பொழுக பழகுகிறார்" என்று மிகவும் அழகாக கூறியுள்ளார் நடிகர் பார்த்திபன்.