Breaking News

200 கோடி ரூபா மோசடி – நடிகை ஜாக்குலினுக்கு பிணை

200 கோடி ரூபா மோசடி – நடிகை ஜாக்குலினுக்கு பிணை

பிரபல பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை பிணையில் விடுவிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் தொடர்பில் 200 கோடி இந்திய ரூபா மோசடி வழக்கு தொடர்பாக அவர் நேற்றைய தினம் (26) நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன்போது 50,000 இந்திய ரூபா பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரான தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகரிடம் நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வரும் அதேவேளை, அவரிடமிருந்து பல கோடி ரூபா பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டதாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.