நடிகை சமந்தா ஒரு திகில் கதையில் நடிக்கிறார்.
இந்த படம் ராஜஸ்தான் பின்னணியில் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது.
இதில் சமந்தா ராணியாகவும், பேயாகவும் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆயுஷ்மன் குரானாவும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
அமர் கௌசிக் திரைப்படத்தை இயக்குகிறார்
ஹிந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
இதனிடையே அதிரடி சண்டைகளுடன் தயாராகும் வெப் தொடரிலும் சமந்தா நடிக்க உள்ளார். இதற்காக சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.