Breaking News

Rotorua வில் மதுபானக் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது...!!

Rotorua வில் மதுபானக் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது...!!

கடந்த மாதம் Rotorua வில் இடம்பெற்ற மோசமான கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி அன்று மாலை ஆயுதங்களுடன் நான்கு பேர் கவாஹா பாயின்ட் மதுபானக் கடைக்குள் நுழைந்து ஊழியர்களை அச்சுறுத்தியதாக டிடெக்டிவ் சார்ஜென்ட் டோனி கோல்பி கூறினார்.

கடையில் இருந்து மதுவை திருட முயன்ற அவர்கள், அவர்களை தடுக்க முயன்ற ஊழியர் ஒருவரை தாக்கினர்.

குற்றவாளிகள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களில் 14 வயது சிறுவன் ஒருவன் மட்டும் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக துப்பறியும் சார்ஜென்ட் கோல்பி தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 18 வயது இளைஞர் ஒருவர் நாளை Rotorua மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் 14 வயது சிறுவனும் மற்றொரு 18 வயது இளைஞனும் Rotorua இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

இதனிடையே 12 வயது சிறுவன் Rotorua இளைஞர் நீதிமன்றத்தில் ஒரு மோசமான கொள்ளைக் குற்றச்சாட்டின் பேரில் வரும் நாட்களில் ஆஜர்படுத்தப்படுவார் என கோல்பி கூறினார்.