Breaking News

இன்றைய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

இன்றைய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

இன்று கொழும்பில் நடத்த ஏற்பாடாகியுள்ள போராட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

போராட்ட பகுதியில் கூடாரம் கட்டிய சிலர் இன்னும் அங்கு தங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று மிகக்குறைவான கூடாரங்களே எஞ்சியுள்ள நிலையில் இன்று 123ஆவது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

எனினும், இன்று பிற்பகல் போராட்ட தளத்தில் பல போராட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இன்றைய தினத்தை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.