Breaking News

சீனாவுக்கு எதிராக போர் பயிற்சியை துவங்கியது தாய்வான்...!

சீனாவுக்கு எதிராக போர் பயிற்சியை துவங்கியது தாய்வான்...!

சீனவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாய்வான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.

தாய்வானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இவ்விவகாரத்தில் தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அண்மையில் தைவானுக்குச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தாய்வான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்து வருகிறது.

இந்தநிலையில் அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு எதிராக தாய்வானும் ஏவுகணைகளை வீசி போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.

போர் ஒத்திகை ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான் எனவும் பதிலடி அல்ல எனவும் தாய்வான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே தாய்வான் வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் வூ கூறுகையில்...

தாய்வான் மீதான படையெடுப்புக்குத் தயாராக சீனா பெய்ஜிங் தீவைச் சுற்றி வான் மற்றும் கடல் பயிற்சிகளைப் பயன்படுத்தி படையெடுப்புக்குத் தயாராகி வருகிறது.

தாய்வானில் பொதுமக்களின் மன உறுதியை பலவீனப்படுத்தும் வகையில் பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள், சைபர் தாக்குதல்கள், தவறான தகவல் பிரச்சாரம் மற்றும் பொருளாதார வற்புறுத்தல் போன்றவற்றை சீனா வழி நடத்துகிறது என குற்றம்சாட்டி உள்ளார்.

சீனவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாய்வான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.