Breaking News

த்ரிஷாவின் நம்பிக்கை!

த்ரிஷாவின் நம்பிக்கை!

தமிழ் சினிமாவில், 23 ஆண்டுகளாக நடித்து வருகிறார், த்ரிஷா. தற்போது, 39 வயதாகி விட்ட போதும், திருமணத்தைப் பற்றி கவலைப்படவில்லை. சமீப காலமாக, தன் திறமைக்கு தீனி போடக் கூடிய சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று, ‘பீல்’ பண்ணி வந்த, த்ரிஷாவுக்கு, தற்போது, பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவை என்ற ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார், மணிரத்னம்.

இதன் காரணமாக, ‘இதுவரை எனக்குள் அடக்கி வைத்திருந்த மொத்த நடிப்பு வித்தையையும் இந்த படத்தில் இறக்கி வைத்திருக்கிறேன். ஏற்கனவே ஹிந்தியில், ‘என்ட்ரி’ கொடுத்துவிட்ட போதும், தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை. இந்த படத்தை, ஹிந்தியிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுவதால், பொன்னியின் செல்வன் படம் மூலம் அடுத்து, பொலிவுட்டிலும் என் கொடியை பறக்க விடப்போகிறேன்…’ என்கிறார், த்ரிஷா.