Breaking News

ஆக்லாந்தில் இரவோடு இரவாக இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் - பொலிஸார் விசாரணை...!!!

ஆக்லாந்தில் இரவோடு இரவாக இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் - பொலிஸார் விசாரணை...!!!

ஆக்லாந்தில் இரவோடு இரவாக இடம்பெற்ற பல திருட்டு சம்பவங்களை தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவு 12.15 மணியளவில், Takanini, Great South வீதியில் உள்ள ஒரு கடையில் திருட்டு நடந்ததாகக் கிடைத்த புகாரின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

கடையின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பில் 15 மற்றும் 18 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன் திருட்டு குற்றச்சாட்டில் இன்று மனுகாவ் இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே Howick, Otara மற்றும் Manukau ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் ஒரே இரவில் நடந்த திருட்டுகள் குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்