Breaking News

Kaitaia வில் இடம்பெற்ற கடுமையான தாக்குதல் சம்பவம் - பெண் ஒருவர் பொலிஸார் காவலில்...!!!

Kaitaia வில் இடம்பெற்ற கடுமையான தாக்குதல் சம்பவம் - பெண் ஒருவர் பொலிஸார் காவலில்...!!!

இன்று பிற்பகல் Kaitaia வில் இடம்பெற்ற ஒரு கடுமையான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் பொலிஸார் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Worth Street இல் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிற்பகல் 3 மணிக்குப் பிறகு  அறிவிக்கப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

ஒரு அறிக்கையில், அவர்கள் ஒரு பெண்ணை காவலில் எடுத்துள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் பொலிஸார் தேடவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தீவிரமான நிலையில் உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.