Breaking News

எதிர்வரும் சனிக்கிழமை நுகேகொடையில் பொது பேரணி ஏற்பாடு

எதிர்வரும் சனிக்கிழமை நுகேகொடையில் பொது பேரணி ஏற்பாடு

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்வரும் சனிக்கிழமை நுகேகொடையில் பொது பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.

அரசாங்க அடக்குமுறை, அவசரகால நிலை மற்றும் பல காரணிகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கை மையமாக கொண்டு இப்பேரணி நடைபெறவுள்ளது.

தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம், சிவில் அமைப்புகள் மற்றும் பல தரப்பினரும் இந்த பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர்.