Breaking News

கொடைக்கானலில் ஆபத்தான இடத்தில் புகைப்படம்‌ - தவறி விழுந்த இளைஞர் மாயம்...!!

கொடைக்கானலில் ஆபத்தான இடத்தில் புகைப்படம்‌ - தவறி விழுந்த இளைஞர் மாயம்...!!

கொடைக்கானலில் பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்த இளைஞரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அருவி மற்றும் நீரோடைகளில் நீர்வரத்தும் அதிகமாக காணப்படுகிறது, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டிய‌ன் (28) என்ற இளைஞர் கொடைக்கானல் கீழ்மலை கிரமமான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு ம‌லைக்கிராம‌ப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

அவர் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது பாறை சரிவுகளில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்த போது எதிர்பாராத விதமாக கால் த‌வறி அருவியின் ப‌ள்ள‌த்தாக்கு ப‌குதியில் விழுந்து மாய‌மாகியுள்ளார்.

உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அஜய் பாண்டியனின் இறுதி நிமிட காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது