Breaking News

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு?

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு?

வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கை பணியாளர்களை விரைவாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தொழிலமைச்சில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

"வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுச் செய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கு நாடு திரும்ப விமான பயணச்சீட்டை பெற்றுக் கொள்வதில் சிரமம் நிலவினால் அது குறித்து தேடிப் பார்த்து விமான டிக்கட்டுகளை பெற்று அவர்களுக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை , வெளிநாடுகளில் தங்கியுள்ள பணியாளர்கள் நாடு திரும்புவதற்கு விமான டிக்கட்டுக்களை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கினால் அதாவது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கு இலவசமாக விமான பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

இலங்கைக்கு 1,000 பணியாளர்களை அழைத்து தனிமைப்படுத்துவதில் சிரமம் உள்ளது. ஆகவே தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடவசதியை அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்" என்றார்.
மேலும் ,அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செலவில் 09 மாகாணங்களிலும் தனிமைப்படுத்தல் மையங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகதெரிவித்தார்.

இதற்கான அனுமதி பெருவது தொடர்பில் தேசிய கொரோனா தடுப்பு பணிக்குழுவுடன் கலந்துரையாடப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.