Breaking News

நாட்டில் 7 மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றும் இல்லை!

நாட்டில் 7 மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றும் இல்லை!

கொரோனா தொற்றின் காரணமாக ஸ்தம்பிதம் அடைந்த பல பிரதேசங்கள் தற்போது விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 நாட்களாக நாட்டில் 7 மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லையென்று தேசிய கொவிட் ஒழிப்பு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், பதுளை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை.

தொற்றின் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் மட்டக்களப்பு, மன்னார், மொனராகல் மாவட்டங்ளில் தலா ஒருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது கம்பஹா, கொழும்பு, கண்டி, களுத்துறை மாவட்டங்கள் மற்றும் சிறைச்சாலை கொத்தணியிலே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் அதனையும் கூடிய விரைவில் கட்டுப்படுத்த மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்று தேசிய கொவிட் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,000 ஐ கடந்துள்ள நிலையில், தற்போது 7,000 இற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.