Breaking News

மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழப்பு

மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழப்பு

வெலிகந்த அசேலபுர பகுதியில் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மா அரைக்கும் இயந்திரத்தில் வேலைசெய்து கொண்டிருந்த குறித்த பெண்ணின் கூந்தல் இயந்திரத்தில் சிக்கியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி ,நேற்று(30) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 40 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

மேலும் ,சம்பவம் குறித்து வெலிகந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.