Breaking News

எரிபொருள் இருப்பு இன்றைக்கு மாத்திரமே போதுமானது - இலங்கை மின்சார சபை

எரிபொருள் இருப்பு இன்றைக்கு மாத்திரமே போதுமானது  - இலங்கை மின்சார சபை

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் ஃபர்னஸ் ஒயில் இன்றைக்கு மாத்திரமே போதுமானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திக்காக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கப்படும் டீசல் கையிருப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளதுடன், சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் உள்ள அனல்மின் நிலையத்திற்கும் விநியோகிக்கப்படும் பர்னஸ் ஒயில் இன்று மாத்திரமே போதுமானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்பதிவு செய்யப்பட்டுள்ள டீசல் மற்றும் ஃபர்னஸ் ஒயில் இன்று விநியோகம் செய்யப்படாவிட்டால் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.