Breaking News

சட்டவிரோத மணல் அகழ்வு - 9 பேர் கைது!

சட்டவிரோத மணல் அகழ்வு - 9 பேர் கைது!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு குளம் பகுதியில் நேற்றைய தினம்(25) சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக விசுவமடு 6 S.R  இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கல்மடுகுளம் பகுதியில்  உள்ள நெத்தலியாற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் இடுபட்ட 5 உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகள் ஐவரும் சட்டவிரோதமாக உழவுயிந்திரத்திற்கு மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 4 சந்தேக நபர்களும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களையும், உழவு இயந்திரங்களையும் தருமபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.