Breaking News

சட்டவிரோதமாக பணத்தை மறைத்து வைத்துள்ள இலங்கையர்களை அம்பலப்படுத்தத் தயார் : ரஞ்சன் ராமநாயக்க

சட்டவிரோதமாக பணத்தை மறைத்து வைத்துள்ள இலங்கையர்களை அம்பலப்படுத்தத் தயார் :  ரஞ்சன் ராமநாயக்க

பண்டோர ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ள பெருந்தொகையான சொத்துக்களை மறைத்து வைத்துள்ள நபர்கள் தொடர்பில் விசேட தகவல்களை வழங்குவதாக தற்போது சிறையிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது கோரிக்கையை நிறைவேற்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் தீர்மானித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் பணத்தை சேகரித்து வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டவர்களை அம்பலப்படுத்த தயார் என இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிடம் முன்னாள் எம்.பி. தெரிவித்துள்ளார்.