Breaking News

ஒக்சிசனை நம்பியிருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது- மருத்துவர் எச்சரிக்கை

ஒக்சிசனை நம்பியிருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது- மருத்துவர் எச்சரிக்கை

ஒமிக்ரோனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பத்து வீதத்தினாலும் ஒக்சிசனில் தங்கியிருப்பவர்கள் எண்ணிக்கை8 வீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

19 மருத்துவமனைகளில் தற்போது 5400 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளின் கட்டில்கள் 40 வீதம் நிரம்பிவிட்டன தற்போது இடநெருக்கடி இல்லாத போதிலும் சுகாதார வழிகாட்டுதல்களையும் பூஸ்டர் டோசினையும் புறக்கணித்தால் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை பெறவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.