Breaking News

போதுமான எரிபொருள் கிடைத்தால் மின்வெட்டு இல்லை!

போதுமான எரிபொருள் கிடைத்தால் மின்வெட்டு இல்லை!

போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் இன்றும் நாளையும் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் வரை 100 மெட்ரிக் தொன் எரிபொருளை பெற்றுக்கொண்டதையடுத்து மின்சார சபையினால் எவ்வித இடையூறும் இன்றி மின்சாரத்தை விநியோகிக்க முடிந்துள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெற்றதால், திட்டமிட்ட மின்வெட்டு நேற்றைய தினம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளதால், அடுத்த சில நாட்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி மின்சாரத்தை வழங்க முடியும் என ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.