Breaking News

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு - 42 பேர் பலி....!!!!

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு - 42 பேர் பலி....!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் 15 மாகாணங்களில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 76 பேர் காயமடைந்துள்ளதாகவும் கடந்த 20 நாட்களில் 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறுகையில்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி வழங்கப்பட்டு வருகிறது. பேரிடர்களை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருவதாக கூறினர்

பனிப்பொழிவினால் நெடுஞ்சாலைகளில் மாட்டிக் கொண்டுள்ள நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.