Breaking News

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கமில்லை- நாமல்

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கமில்லை- நாமல்

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும்எண்ணம் எதுவும் ஆளும்கட்சிக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான திட்டம் எதுவுமில்லை,நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினதும் அரசியல் வாழ்;க்கையில் தேர்தல்களை ஒத்திவைப்பது அல்லது நீடிப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று வருடங்களிற்கும் பொதுமக்களிற்கு நீதியாக நடந்துகொள்ள அரசாங்கம் என்ற முறையில்  முயற்சிகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.