Breaking News

விவாகரத்து பதிவை சமந்தா நீக்கியது ஏன்? - காரணம் இது தான்...!!!

விவாகரத்து பதிவை சமந்தா நீக்கியது ஏன்? - காரணம் இது தான்...!!!

தான் நாக சைதன்யாவை பிரிவது குறித்து இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவை சமந்தா நீக்கியதற்கான உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது.

சமந்தாவும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு அதாவது 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

விவாகரத்து குறித்து அறிவித்த பிறகு தானும், நாக சைதன்யாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் சமந்தா. இதையடுத்து விவாகரத்து அறிவிப்பு போஸ்ட்டை தற்போது நீக்கிவிட்டார். அதை பார்த்தவர்களோ சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேரப் போகிறார்கள் போன்று என்று பேசத் துவங்கிவிட்டார்கள்.

நாக சைதன்யாவுடன் மீண்டும் சேர நினைத்து சமந்தா அந்த போஸ்ட்டை நீக்கவில்லையாம். தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது என்று நீக்கிவிட்டாராம். தன் வாழ்க்கைக்கு தேவையில்லாத எதுவும் இன்ஸ்டாகிராமில் இருக்கக் கூடாது என்று நினைக்கிறாராம் சமந்தா.

சமந்தா சந்தோஷம் தான் தன் சந்தோஷம் என்று அண்மையில் தெரிவித்தார் நாக சைதன்யா. மேலும் விவாகரத்து பெறுவது என்பது சரியான முடிவு என்றார். சமந்தா எப்பொழுதுமே என் மகள் என்று நாக சைதன்யாவின் தந்தையான நாகர்ஜுனா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.